இலங்கை மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி கைவிடப்பட்டுள்ளது.
இந்த போட்டி இன்று க்றிஸ்ட்சேர்ச் மைதானத்தில் நடைபெறவிருந்தது.
எனினும் மழை காரணமாக எந்தவொரு பந்தும் வீசப்படாத நிலையில், போட்டி கைவிடப்பட்டது.
ஒருவேளை தென்னாப்பிரிக்க நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டிகள் இரண்டிலும் தென்னாப்பிரிக்கா தோற்று இன்றைய போட்டியில் இலங்கை வென்றிருந்தால், உலகக்கிண்ண சுப்பர் லீக் தொடருக்கான நேரடித் தகுதியை இலங்கை பெற வாய்ப்புகள் இருந்தன.
எனினும் இன்றைய போட்டி கைவிடப்பட்டதால் அந்த வாய்ப்பும் அற்றுப் போனது.
TSN