ரஷ்யாவின் உத்தரவை மீறிய கூகுல் நிறுவனத்திற்கு 407 கோடி ரூபாய் அபராதம்

1 month ago
World
aivarree.com

சர்ச்சைக்குரிய கருத்துக்களை நீக்க மறுத்த குற்றத்திற்காக கூகுள் நிறுவனத்துக்கு சுமார் 407 கோடி ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

ரஷ்யாவில் பயங்கரவாதம் மற்றும் தன்பாலின் ஈர்ப்பு குறித்தான உள்ளடக்கம் கொண்ட தகவல்களை பரப்பும் யூடியுப் வீடியோக்களை நீக்குமாறு கூகுள் நிறுவனத்துக்கு ரஷ்யாவின் மாஸ்கோ நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

எனினும் கூகுல் நிறுவனம் இதனை நீக்க மறுத்துள்ளது.

இந்நிலையில், நாட்டின் சட்டத்திட்டங்களுக்கு புறம்பான தகவல்களை பரப்பி பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதாக கூகுள் நிறுவனத்தின் மீது மாஸ்கோ நீதிமன்றம் குற்றஞ்சாட்டியுள்ளது.

இதனையடுத்தே, சர்ச்சைக்குரிய கருத்துக்களை நீக்க மறுத்தமைக்காக கூகுள் நிறுவனத்துக்கு சுமார் 407 கோடி ரூபாய் (49 மில்லியன் டொலர்) அபராதம் விதித்து உத்தரவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.