இலங்கையுடன் கடன் மறுசீரமைப்பை மேற்கொள்வதற்கு இந்தியா இணக்கம் தெரிவித்து, சர்வதேச நாணய நிதியத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளது.
அதேபோல சீனா இலங்கைக்கு இரண்டு வருடங்கள் கடனுக்கான சலுகைக் காலத்தை வழங்குவதாக அறிவித்து நிதியமைச்சுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது.
இந்தக் கடிதமானது, நாணய நிதியத்தின் உதவியைப் பெற்றுக் கொள்வதற்கு போதுமானது இல்லை என்று இலங்கையின் விடயம் அறிந்த அதிகாரிகளை மேற்கோள்காட்டி பிஸ்னஸ்டுடே இணையத்தளம் தெரிவித்துள்ளது.
எனவே இன்னும் இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியத்தின் 2.9 மில்லியன் டொலர் உதவி கிடைப்பது சந்தேகமே என்றும் அந்த இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.