இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்கின்றவர்கள் விமான நிலையங்களில் செலுத்த வேண்டிய கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பதாக அண்மையில் செய்திகள் வெளியாகி இருந்தன.
இதுதொடர்பாக இலங்கை விமானப் போக்குவரத்து அதிகாரசபை விளக்கம் ஒன்றை வழங்கியுள்ளது.
இதன்படி 2003ம் ஆண்டு முதல் நடைமுறையில் இருக்கின்ற விமானநிலைய கட்டணத்தில் அதிகரிப்பு எதுவும் இடம்பெற்றிருக்கவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மாறாக யாழ்ப்பாணம் மற்றும் கொழும்பு சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக வெளிநாடு செல்கின்றவர்கள் செலுத்த வேண்டிய கட்டணம் 50 சதவீதமாக குறைக்கப்பட்டு, தற்போது 30 டொலர்களாக உள்ளது.
அதேபோல மத்தளை விமான நிலையத்திலுந்து வெளியேறுவதற்கு கட்டணம் இல்லாது செய்யப்பட்டுள்ள அதேவேளை, கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளிநாடு செல்வதற்கான கட்டணம் 60 டொலர்களாக மாற்றமடையாமல் பேணப்படுகிறது.