ATM இயந்திரத்தை அபகரித்துச் சென்ற முகமூடி மனிதர்கள் | சாரதியை கைவிட்டு தப்பியோட்டம்

1 year ago
Sri Lanka
aivarree.com

கம்பளை நகரில் உள்ள தனியார் வங்கி ஒன்றின் தானியக்க பண இயந்திரம் (ATM) முகமூடி அணிந்து வந்த அடையாளம் தெரியாத நபர்களால் அபகரித்துச் செல்லப்பட்டுள்ளது.

நேற்றிரவு இந்த சம்பவம் இடம்பெற்றதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

இதனை அடுத்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல்களில், கொள்ளையர்கள் பிரவேசித்த வேன் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டது.

அந்த வேனை செலுத்திய சாரதி கைகள் கட்டப்பட்ட நிலையில் வேனில் இருந்து மீட்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கொள்ளையர்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை.