நாளை (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பஸ் கட்டணங்கள் 12.9 வீதத்தினால் குறைக்கப்படும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவன்ன தெரிவித்துள்ளார்.
அதேநேரம் ஆரம்ப கட்டணம் 30 ரூபாவாக குறைக்கப்படும் என போக்குவரத்து ஆணைக்குழு ஏற்கனவே அறிவித்துள்ளது.
எரிபொருள் விலை குறைக்கப்பட்ட நிலையில் இந்த கட்டண குறைப்பு மேற்கொள்ளப்படுகிறது.