சுற்றுலாப் பயணிகளின் வருகை தொடர்ந்து அதிகரிப்பு

3 weeks ago
aivarree.com

ஏப்ரல் மாத்தில் முதல் 9 நாட்களில் மாத்திரம் 50 ஆயிரத்திற்கும் அதிகமான வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

அதன்படி, 500537 வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர் எனவும், இதில், 9 725 பேர் இந்தியாவில் இருந்தும், 5 878 பேர் லண்டனில் இருந்தும், 5057 பேர் ரஷ்யாவில் இருந்தும் வருகை தந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, இந்த ஆண்டில் இதுவரை நாட்டிற்கு வருகை தந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 7 இலட்சத்தைக் கடந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.