நாட்டின் 7 மாகாணங்களில் இன்று வெப்பநிலை அதிகரிப்பு

2 weeks ago
Sri Lanka
aivarree.com

நாட்டின் 7 மாகாணங்களில் இன்று வெப்பநிலை அதிகரித்து காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதன்படி வடக்கு, வடமத்திய, மேல், சப்ரகமுவ, கிழக்கு, தெற்கு மற்றும் வடமேல் ஆகிய மாகாணங்களில் வெப்பநிலையானது மனித உடலால் உணரப்படும் அளவினைவிட அதிகரித்து காணப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு, மொனராகலை மாவட்டத்தின் சில இடங்களிலும் வெப்பநிலை அதிகரிக்ககூடும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

ஏப்ரல் மாதத்தின் இறுதிவரை நாட்டின் சில பகுதிகளிலும் வெப்பநிலை தர சுட்டெண் அதிகரிக்ககூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.