ஓமானில் ஞாயிற்றுக்கிழமை முதல் பெய்த கனமழையால் ஏற்பட்ட அனர்த்தம் காரணமாக 17 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், ஓமானின் பல பகுதிகளில் உள்ள பாடசாலைகள் மற்றும் அரச நிறுவனங்களை மூட ஓமான் அரசு முடிவு செய்துள்ளது.
அத்துடன் கடும் மழை காரணமாக பல கார்கள் மற்றும் உடைமைகள் சேதமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.