ஐக்கிய தேசியக் கட்சியின் நிர்வாகக் குழு கூடியுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்காலத்தில் நடைபெறவுள்ள கட்சி மாநாடு தொடர்பில் இதன்போது நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவி ரவி கருணாநாயக்கவுக்கு வழங்கப்படுமென சமூக ஊடகங்களில் பரவிவரும் பேச்சுக்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
எவ்வாறெனினும், கட்சி மாநாட்டில் எந்த நிலைப்பாடும் மாற்றப்படாது என கட்சி உறுப்பினர்கள் மத்தியில் பேசப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.