எதிர்வரும் வாரம் முதல் தொழில்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக அகில இலங்கை துறைமுக பொது ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.
சம்பள உயர்வு வழங்கப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
ஒக்டோபர் 23 ஆம் திகதி கூடிய அமைச்சரவை தீர்மானத்தின் பிரகாரம் கூட்டு ஒப்பந்தத்தின் மூலம் துறைமுக ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு இடைநிறுத்தப்பட்டது.
இதன்படி, துறைமுக ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு தொடர்பான பிரச்சினை எழுந்துள்ள நிலையில், நேற்று (29) அகில இலங்கை துறைமுக பொது ஊழியர் சங்கத்தின் தலைவர் குறித்த அதிகாரிகளுடன் இது தொடர்பில் சந்தித்து கலந்துரையாடினார்.
எனினும், பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில் மேற்கண்ட தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.