சி.ஐ.டி.யிலிருந்து வெளியேறினார் ஜெரோம் பெர்னாண்டோ

6 months ago
Sri Lanka
aivarree.com

சர்ச்சைக்குரிய போதகர் ஜெரோம் பெர்னாண்டோவிடம் 08 மணிநேரம் வாக்கு மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

வாக்கு மூலம் வழங்கிய பின்னர் அவர் இன்று (30) பிற்பகல் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திலிருந்த வெளியேறிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மதங்களை இழிவுபடுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள ஜெரோம் பெர்னாண்டோ சிங்கப்பூரில் இருந்து நேற்று (29) இலங்கை வந்தடைந்தார்.

குறித்த குற்றச்சாட்டுக்காக அவர் நாடு திரும்பியதும் 48 மணிநேரத்துக்குள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகி வாக்கு மூலம் அளிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

அந்த உத்தரவுக்கு அமைவாகவே அவர் ஜெரோம் பெர்னாண்டோ இன்று காலை சி.ஐ.டி.யில் ஆஜராகி வாக்கு மூலம் வழங்கியிருந்தார்.