பொலிஸாரை தாக்கிய நபர் கைக்குண்டுடன் கைது

6 months ago
Sri Lanka
aivarree.com

கிரிஉல்ல பொலிஸ் போக்குவரத்து பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட்கள் இருவரை தாக்கி, மேலும் சார்ஜன்ட் ஒருவரை கத்தியால் குத்தியதாக கூறப்படும் பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர் குளியாப்பிட்டிய, கிரிஉல்ல பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதின் போது, சந்தேக நபரிடமிருந்து கைக்குண்டொன்றும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்த பொலிஸ் சார்ஜன்ட்கள் தம்பதெனிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிரிஉல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.