ரமழான் பண்டிகையை முன்னிட்டு முஸ்லிம் பள்ளிவாசல்களில் பொலிஸாரால் விசேட பாதுகாப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோனின் பணிப்புரைக்கு அமைவாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் திரிவேத இராணுவத்தின் பாதுகாப்பு படையினர் இந்த நிகழ்ச்சித்திட்டத்திற்காக அழைக்கப்பட்டுள்ளனர்.
அதன் கீழ், நாடளாவிய ரீதியில் 2,453 முஸ்லிம் பள்ளிவாசல்கேளில் பாதுகாப்பு அமுல்படுத்தப்பட்டுள்ளது
மேலும் இந்த பாதுகாப்பிற்காக 5,580 பொலிஸ் அதிகாரிகள், 510 சிறப்பு அதிரடிப்படை அதிகாரிகள் மற்றும் 1,260 இராணுவ வீரர்கள் உட்பட 7,350-க்கும் மேற்பட்ட பாதுகாப்பு படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டார்.