ஐக்கிய மக்கள் கூட்டணியில் அங்கம் வகிக்கின்ற சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணி போன்றவற்றின் உறுப்பினர்கள், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எதிர்வரும் தேர்தல்களில் ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து செயற்பட வேண்டும் என்ற கோரிக்கை சஜித்திடம் முன்வைக்கப்பட்டு, இதற்கான செயற்பாடுகளும் முன்வைக்கப்பட்டன.
இதுதொடர்பாக ஐக்கிய மக்கள் சக்தி சரியான பதிலை வழங்கி இருக்காத அதேநேரம், அண்மையில் பாராளுமன்றில் வைத்து சஜித் பிரேமதாச இதுகுறித்து கருத்தை வெளியிட்டிருந்தார்.
அதன்படி, ரணில் விக்ரமசிங்கவுடன் எப்போதும் கைக்கோர்த்து செயற்பட போவதில்லை என்று சஜித் அறிவித்திருந்தார்.
இந்த அறிவிப்பு தொடர்பாக தமிழ் பேசும் கட்சிகள் அதிருப்தி கொண்டிருப்பதாகவும், இதுதொடர்பாக சஜித்திடம் நேரடியாக தெரிவிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.