நான்கு பேர் சுட்டுக் கொலை – தென்னிலங்கையில் பரபரப்பு

3 months ago
Sri Lanka
aivarree.com

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பெலியத்தை வெளியேறும் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் குறைந்தது நான்கு பேர் கொல்லப்பட்டனர்.

பொலிஸ் ஊடகப்பேச்சாளர் எஸ்.எஸ்.பி. நிஹால் தல்துவ இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

கொழும்பில் இருந்து டிஃபெண்டர் வாகனத்தில் பயணித்த ஐவர் மீது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

பெலியத்தை வெளியேறும் பகுதியின் ஊடாக தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இருந்து வெளியேறிய குறித்த டிஃபெண்டர் வாகனம், வீதியோரமாக நிறுத்தப்பட்டிருந்த போது, பிக்அப் ரக வாகனம் ஒன்றில் பிரவேசித்த நபர் ஒருவர் இந்தத் தாக்குதலை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.

சம்பவத்தில் படுகாயமடைந்த மற்றுமொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அண்மையில் இலங்கையில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் அதிக எண்ணிக்கையானவர்களை ஒரேசமயத்தில் காவு கொண்ட முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

Photo – Newswire