அவுஸ்திரேலியா பறந்தார் ஜனாதிபதி ரணில்

6 months ago
Sri Lanka
aivarree.com

அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் பெப்ரவரி 9ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரை  7ஆவது இந்து சமுத்திர மாநாடு நடக்கிறது. 

இதில் பிரதான உரையாற்றுவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (8) நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றார். 

இந்திய மன்றம் மற்றும் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் இந்த விஜயத்தில் ஜனாதிபதி இணைந்துள்ளார். 

அங்கு அவர் இலங்கைக்கான முதலீட்டு வாய்ப்புகள் குறித்தும் அங்கு ஆராய்வார் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.