ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஸவும் இன்று (23) மீண்டும் சந்திக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சந்திப்பு இன்னும் சற்று நேரத்தில் இடம்பெறவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதியின் வேண்டுகோளுக்கமைய சந்திப்பு இடம்பெறவுள்ளதாகவும் இந்த சந்திப்பு தீர்க்கமானதாக இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.