சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான அறிவிப்பு

2 weeks ago
Sri Lanka
aivarree.com

2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான, பரீட்சை அனுமதி அட்டை விநியோகம் அடுத்த வாரம் ஆரம்பிக்கப்படும் என பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.

பாடசாலை விண்ணப்பதாரர்கள் அதிபர்கள் ஊடாக பரீட்சை அனுமதி அட்டையை பெற்றுக்கொள்ள முடியும் எனவும், தனியார் விண்ணப்பதாரர்களுக்கு தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும் எனவும் பரீட்சைத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதற்கிடையில், சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் மே மாதம் 6 ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை நடைபெறும் எனவும், 452979 பரீட்சாத்திகள் இப்பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர் எனவும் பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.