தமிதாவின் விளக்கமறியல் நீடிப்பு

2 weeks ago
aivarree.com

நிதி மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நடிகை தமிதா அபேரத்ன இன்று கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு முன்னிலையாகியிருந்தார்.

அதன்படி நடிகை தமிதா அபேரத்னவையும் அவரது கணவரையும் எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் முன்வைத்த உண்மைகளை கருத்திற்கொண்டே நீதிமன்றம் இந்த உத்தரவு பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.