உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்ட 223 குடும்பங்களுக்கு புதிய வீடுகள்

3 weeks ago
Sri Lanka
aivarree.com

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்ட 223 குடும்பங்களுக்கு வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளதாக வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

குறித்த வீடுகளை நிர்மாணிப்பதற்காக அரசாங்கம் 139 மில்லியன் ரூபாயை செலவிட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

காணியுடன் கூடிய புதிய வீடு கட்டுதல் மற்றும் வீடுகளை புனரமைப்பு செய்தல் போன்ற பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கம்பஹா கட்டுவாபிட்டிய தேவாலயத்துடன் தொடர்புடைய 144 குடும்பங்களுக்கு இந்த வீட்டுத்திட்டத்தின் கீழ் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதுடன், தேவாலயங்கள் தொடர்பான வீடமைப்பு திட்டத்திற்காக 90.855 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொச்சிக்கடை தேவாலயத்துடன் தொடர்புடைய 9 குடும்பங்களுக்கு வீடுகளும் மட்டக்களப்பு மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட 70 குடும்பங்களுக்கு வீடுகளும் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இத்திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ் 11 வீடுகளுக்கு 5 மில்லியன் ரூபாயக்கும் அதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த வீடமைப்புத் திட்டத்தை விரைவாக நிறைவு செய்யுமாறு தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேலும் தெரிவித்துள்ளார்.