முன்னாள் அமைச்சர் AHM பௌசி பாராளுமன்ற உறுப்பினராக பதவி ஏற்கவுள்ளார்.
அவரை பாராளுமன்ற உறுப்பினராக அறிவிக்கும் வர்த்தமானி அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், கொழும்பு மாவட்ட மேயர் வேட்பாளராக போட்டியிடுவதற்காக பாராளுமன்ற உறுப்பினர் பதவியை துறந்தார்.
அதன்படி கடந்த பொதுத் தேர்தலில் முஜிபுர் ரஹ்மானுக்கு அடுத்தபடியாக அதிக வாக்குகளைப் பெற்றிருந்த ஃபௌசி அந்த பதவிக்கு நியமிக்கப்படுகிறார்.