மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பகல் அல்லது இரவு வேளையில் கடும் மழை பெய்யக்கூடிய வாய்ப்புகள் உள்ளன.
வளிமண்டலவியல் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் தெற்கு கரையோர பிரதேசங்களிலும் காலையில் மழையுடனான வானிலை நிலவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும்.
இடிமின்னல் மற்றும் கடும் காற்றிலிருந்து தற்காத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.