ஒரு கோடிக்கு அதிகமானோர் இம்முறை வாக்களிக்க தகுதி

2 weeks ago
Sri Lanka
aivarree.com

2024ஆம் ஆண்டிற்கான ஜனாதிபதித் தேர்தலில் சுமார் ஒரு கோடியே எழுபது இலட்சம் பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

குறித்த தொகையில் 18 வயதை பூர்த்திசெய்த 10 இலட்சம் புதிய வாக்காளர்கள் உள்ளடங்குவதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான அடிப்படை ஏற்பாடுகள் நிறைவடைந்துள்ளதாகவும் ஜனாதிபதி தேர்தலுக்கு 1000 கோடி ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வருடத்திற்கான வாக்காளர் பதிவேடுகள் தயாரிப்பது தொடர்பான நடவடிக்கைகளை இன்று தொடக்கம் ஆரம்பித்துள்ளதாக தேர்தல் செயலகம் தெரிவித்துள்ளது.

வாக்காளர் பதிவேடு தயாரிக்கும் நடவடிக்கைகள் நாளையுடன் நிறைவடைவதாகவும் தேர்தல் செயலகம் குறிப்பிட்டுள்ளது.

இதன்படி, வாக்களிக்க தகுதி இருந்தும் வாக்காளர் பதிவேட்டில் பெயர் சேர்க்கப்படாத நபர்கள், தங்களின் பெயர்களை உரிய பட்டியலில் சேர்க்க முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.