ராகுல் காந்திக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் முறைப்பாடு

2 weeks ago
World
aivarree.com

இந்திய பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு ராகுல் காந்தி தெரிவித்த கருத்துக்கு எதிராக மத்திய அரசின் சமூகநீதித்துறை இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தேர்தல் ஆணையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.

“பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியமைத்தால் நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தை மாற்றிவிடுவார்கள்” என ராகுல் காந்தி தெரிவித்த கருத்துக்கு எதிராகவே ராம்தாஸ் அத்வாலே இவ்வாறு தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.

அத்துடன் ராகுல் பா.ஜ.க. குறித்து இவ்வாறு பேசுவதை தடுக்க வேண்டும் எனவும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.