இலங்கை அதிகாரிகளுக்கு பாராட்டு தெரிவித்த IMF

2 weeks ago
aivarree.com

நாட்டை தற்போதைய பொருளாதார நிலைமையில் இருந்து முன்னேறுவதற்காக சீர்திருத்தங்களை மேற்கொள்ளுதல் மற்றும் சிறப்பான வேலைத்திட்டங்களை முன்னெடுத்தல் தொடர்பாக, சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவ பணிப்பாளர், இலங்கை அதிகாரிகளுக்கு பாராட்டுத் தெரிவித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க, சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கென்ஜி ஒகமுரா உள்ளிட்ட குழுவினருக்கும் இடையே நேற்று அமெரிக்காவின் – வொஷிங்டன் நகரில் இடம்பெற்ற விசேட கலந்துரைடலின் போதே அவர் இவ்வாறு பாராட்டுத் தெரிவித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.