சாய்ந்தமருது, பாண்டிருப்பு, மருதமுனை ஆகிய பகுதிகளில் இயங்கிய 3 போலி வைத்திய நிலையங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், அதன் இயக்குநரான போலி வைத்தியர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
மிக நுட்பமாக வியாபார உத்தியுடன் பல ஆண்டுகளாக சட்டவிரோதமாக இயங்கிய 3 போலி மருத்துவ நிலையங்களே இவ்வாறு கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.
பொதுமக்களின் சுகாதாரத்திற்கு அச்சுறுத்தலாக அமையும் இடங்கள் மீதான தொடர் சுற்றிவளைப்பின் மற்றுமொரு அங்கமாகவே இவை கண்டறியப்பட்டுள்ளன.
இந்த சுற்றிவளைப்பின் போது தன்னை வைத்தியராக அடையாளம் காட்டிக்கொண்டு எவ்வித அரச அங்கீகாரமும் இன்றி, மருத்துவ நிலையம், அழகுக்கலை நிலையம் மற்றும் பயற்சி நிலையத்தை நடத்தி வந்த நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
மனித உயிர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் இயங்கி வந்த இந்த போலி மருத்து நிலையம் மற்றும் அதன் இயக்குநரான போலி வைத்தியருக்கு எதிராக சட்டநடவடிக்கைகளை மேற்கொள்ள சுகாதாரத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.