2023 ஆண்டு இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையினால் நடாத்தப்பட்ட தரம் ‘V’ கிரிக்கெட் நடுவருக்கான போட்டி பரிட்சையில் மலையகத்தை சேர்ந்த பீ.மோகன்ராஜ் மற்றும் ஆர்.தர்மலிங்கம் ஆகியோர் சித்தியடைத்துள்ளனர்.
இவர்களில் திரு பீ.மோகன்ராஜ் அவர்கள் 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற அகில இலங்கை நடுவர் போட்டி பரீட்சையில் சித்தியடைந்து கிரிக்கெட் நடுவராகவும், இலங்கை கிரிக்கெட் ஸ்கோரர் ஆகவும் சேவையாற்றி வருவதும் குறிப்பிடத்தக்கது.