வெளிநாட்டு வேலை வாய்ப்பை பெற்றுத் தருவதாகக் கூறி நிதி மோசடி செய்த நபர் ஒருவர் படல்கம பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனமொன்றை நடத்திக் கொண்டு கனடா மற்றும் ஏனைய ஐரோப்பிய நாடுகளில் தொழில் வழங்குவதாகக் கூறி நிதி மோசடி செய்த குற்றச்சாட்டில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
29 வயதான சந்தலங்காவ கொடெல்ல பிரதேசத்தை சேர்ந்தவரே கைது செய்யப்படடுள்ளார்.