ஊழியர் சேமலாப நிதி (EPF) மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதி (ETF) என்பவற்றுக்கு 25% “ஒருதடவை” வரி அறவிடப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி இருந்தன.
இந்த விடயத்துக்கு அரசாங்கத்துக்குள்ளேயே எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டன.
இதுதொடர்பாக இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சர் பசில் ராஜபக்ஷ விளக்கமளித்துள்ளார்.
இதன்படி இந்த விசேட பண்ட சேவை வரியானது, தனிநபர் அல்லது நிறுவனம் ஒன்று வரி அறவிடக்கூடிய வருடாந்த வருமானமாக 2000 மில்லியனுக்கு மேல் ஈட்டினால் மட்டுமே இந்த 25% வரி அறவிடப்படும்.
மாறாக ETF மற்றும் EPF இன்னும் 9 நிதியங்களுக்கு இந்த வரி அறவிடப்பட மாட்டாது என்று அவர் அறிவித்துள்ளார்.