இலங்கைக்கு வரும் வெளிநாட்டவர்கள் விசா பெறும் நடைமுறை இன்று நள்ளிரவில் இருந்து மாற்றியமைக்கப்படுகின்றது.
இப்போதுவரை நடைமுறையில் இருக்கும் ETA(Electronic Travel Authentication) முறை இன்று நள்ளிரவோடு முடிவுறுத்தப்பட்டு GBS மற்றும் IVS Global ஆகிய இரண்டு தனியார் நிறுவனங்களின் துணையோடு விசாபெறும் நடைமுறை மாற்றப்டுவதோடு விசாபெறும் புதிய இணையத்தள முகவரியும் அறிமுகமாகின்றது.
எனினும் on arrival (நாட்டினுள் பிரவேசித்து விசாபெறும் நடைமுறை) எந்தமாற்றங்களுமின்றி தொடரும்.
விசாவுக்கான கட்டணங்களும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன..அதனையும் இவ் இணையத்தளத்தில் அறிந்து கொள்ளலாம்..!