வனிந்து ஹசரங்கவிற்கு போட்டித்தடை

1 month ago
SPORTS
aivarree.com

இலங்கை இருபதுக்கு 20 கிரிக்கெட் அணித் தலைவர் வனிந்து ஹசரங்கவிற்கு சர்வதேச கிரிக்கெட் பேரவை போட்டித்தடை விதித்துள்ளது.

பங்களாதேஷ் அணியுடன் இடம்பெற்ற சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளின் போது கிரிக்கெட் பேரவையின் ஒழுக்கவிதிகளை மீறியமைக்காக இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, பங்களாதேசுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் 2 போட்டிகளுக்கும் அவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வனிந்து ஹசரங்கவிற்கு போட்டிக் கட்டணத்தில் 50 வீத அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுடன் 3 தண்டனை புள்ளிகளும் வழங்கப்பட்டுள்ளன.

மேலும் கடந்த 24 மாதங்களில் வனிந்துவிற்கு 8 தண்டனைப் புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.