உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விவாதத்தை ஏப்ரல் 24 ஆம் திகதியிலிருந்து தொடர்ந்து மூன்று நாட்களுக்கு நடாத்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பான ஒத்திவைப்பு விவாதத்தை ஏப்ரல் 24, 25 மற்றும் 26 ஆகிய திகதிகளில் நடத்த கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.