நாட்டின் பிரஜை அல்லாத ஒருவர் அரசியல் கட்சியை ஆரம்பிக்க தடை இல்லை – மஹிந்த தேசப்பிரிய

2 weeks ago
Sri Lanka
aivarree.com

நாட்டின் பிரஜை அல்லாத ஒருவர் எந்த தேர்தலிலும் போட்டியிட முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

மேலும் பிரஜைகள் அல்லாதவர்கள் அரசியல் கட்சியொன்றை பதிவு செய்வதற்கு சட்டரீதியாக எந்த தடையும் இல்லை என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டின் பிரஜை அல்லாத ஒருவர் தேர்தலில் போட்டியிடுவதை மட்டுமே இலங்கைச் சட்டம் தடுப்பதாகவும் மஹிந்த தேசப்பிரிய மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்