இணையவழியில் விண்ணப்பித்த 75 வீதமான கடவுச்சீட்டு விண்ணப்பங்கள் நிராகரிப்பு

2 weeks ago
Sri Lanka
aivarree.com

இணையவழி மூலம் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பித்தவர்களில் பலரது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக, குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்தார்.

தொழில்நுட்ப அறிவு இல்லாததாலும், சில ஆவணங்கள் முறைசாரா முறையில் புதுப்பிக்கப்பட்டதாலும், அவர்களின் கடவுச்சீட்டு அச்சிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், அவர் கூறினார்.

இதன் அடிப்படையில் 75 வீதமான விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

இணையவழி கடவுச்சீட்டு விண்ணப்ப முறை அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து 51 பிரதேச செயலக அலுவலகங்களில் கைரேகை பதிவு செய்யும் நடவடிக்கை ஆரப்பிக்கப்பட்டுள்ளது.

இணையவழியில் விண்ணப்பிக்கும் போது சிலர் பிறப்புச் சான்றிதழ், தேசிய அடையாள அட்டை புகைப்படங்களை தெளிவற்ற முறையில் பயன்படுத்தியிருப்பதாலும், சிலர் வேறு நபர்களின் கையடக்க தொலைபேசி எண்களில் விண்ணப்பித்திருப்பதாலும் செல்லுபடியாகும் கடவுச்சீட்டுகளை அச்சிட முடியவில்லை என அவர் தெரிவித்தார்.