22 வரை எரிபொருள் இறக்குமதி இல்லை

2 years ago
Sri Lanka
aivarree.com

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் ஜுலை 22 ஆம் திகதி வரை பெற்றோலை பெற்றுக்கொள்ள முடியாத நிலை காணப்படுவதாக பிரதமரின் தலைமை அதிகாரி சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடம் நிதி காணப்பட்டாலும், எரிபொருளை இறக்குமதி செய்ய முடியாத நிலைமை காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் தற்போது 11,000 மெற்றிக் டன் டீசல், 5,000 மெற்றிக் டன் பெற்றோல், 30,000 மெற்றிக் டன் உலை எண்ணெய் மற்றும் 800 மெற்றிக் டன் விமானத்திற்கான எரிபொருள் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜூலை 11ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை 38,000 மெற்றிக் டன் டீசல் பெற்றுக்கொள்ளப்படவுள்ளது.

லிட்ரோ நிறுவனம் அடுத்த நான்கு மாதங்களுக்காக 100,000 மெற்றிக் டன் எரிவாயுவை இறக்குமதி செய்யவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.