கொழும்பில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் தாக்கல் செய்த 108 வழக்குகளில் இருந்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை விடுவிக்க கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
இரண்டாவது பிரதிவாதியான ரணில் விக்கிரமசிங்க, நாட்டின் ஜனாதிபதி என்ற ரீதியில் அரசியலமைப்பின் 35(1) வது சரத்தின் பிரகாரம் விடுதலை பெறுவதற்கு உரிமையுள்ளது என கொழும்பு மேலதிக மாவட்ட நீதிபதி மகேஷ டி சில்வா குறிப்பிட்டார்.