வெற்றிடமாகவுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் நாயகம் பதவிக்கு கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் பலரிடையே கடும் போட்டி உருவாகியுள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எவ்வாறெனினும் இந்த போட்டியில் துமிந்த திஸாநாயக்க முன்னணியில் இருப்பதாகவும் கூறப்படுகின்றது.
கட்சியின் சிரேஷ்ட பிரதிச் செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான சரத் ஏக்கநாயக்கவும் இந்த நிலைப்பாட்டில் ஆர்வமாக குறிப்பிடப்படுகின்றது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் நாயகம் பதவியில் இருந்து தயாசிறி ஜயசேகர நீக்கப்பட்டு பிரதிச் செயலாளர் சரத் ஏக்கநாயக்க பதில் செயலாளர் நாயகமாக நியமிக்கப்பட்டிருந்த போதிலும், அண்மையில் அவர் அந்தப் பதவியில் பணியாற்ற நீதிமன்றம் தடை விதித்தது.
பின்னர் நடைபெற்ற கட்சியின் விசேட மத்திய குழுக் கூட்டத்தில் அந்த பதவிக்கான பணிகளை மேற்கொள்வதற்காக பாராளுமன்ற உறுப்பினர் துஷ்மந்த மித்ரபாலவை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
எவ்வாறாயினும் எதிர்காலத்தில் நிரந்தர செயலாளர் நாயகம் நியமிக்கப்படவுள்ளதாகவும், அதற்காகவே இந்தப் போட்டி உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.