வெளிநாட்டில் வேலை செய்யும் இலங்கையர்களுக்கு நற்செய்தி

1 year ago
Sri Lanka
aivarree.com

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வீட்டுக் கடன்களை பெற்றுக்கொடுக்கும் புதிய வேலைத்திட்டம் சில நாட்களுக்குள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. 

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார இதனைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் வங்கித் துறை மற்றும் இலங்கை மத்திய வங்கியுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடல்கள் நிறைவடைந்துள்ளதாக அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

புதிய வேலைத்திட்டத்தின் கீழ், வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்கள் ஏனைய மக்களை விட குறைந்த வட்டி விகிதத்தில் வீட்டுக் கடனைப் பெற முடியும்.

இதற்கான மேலதிக விபரங்கள் இன்னும் சில நாட்களில் வெளியாக்கப்படவுள்ளன.