எதிர்வரும் ஜூலை 15 ஆம் திகதிக்குள் கொழும்பில் இருந்து காங்கேசந்துறை வரை இயக்கப்படும் ரயில் சேவைகளை மீண்டும் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
ரயில் பாதையின் திருத்த பணிகள் காரணமாக தற்போது வடக்கு ரயில் சேவை கொழும்பில் இருந்து அனுராதபுரம் வரை மட்டுமே இயக்கப்படுகிறது.
அனுராதபுரத்தில் இருந்து வவுனியா வரையான ரயில் பாதையின் திருத்தப் பணிகளை அடுத்த மாதம் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் கூறியுள்ளது.
இந்நிலையில் கொழும்பில் இருந்து காங்கேசந்துறை வரையிலான ரயில் சேவையை மீண்டும் ஜூலை 15 ஆம் திகதிக்குள் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக மஹவ – ஓமந்தை ரயில்வே திட்டப் பணிப்பாளர் அசோக முனசிங்க குறிப்பிட்டுள்ளார்.