ரஷ்ய தலைநகர் மொஸ்கோ மீது ஆளில்லா விமானம் மூலம் உக்ரேன் தாக்குதல் நடத்தியதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் செவ்வாயன்று தெரிவித்துள்ளது.
இதனால் சிலர் வீடுகளை காலி செய்யும்படி நிர்ப்பந்திக்கப்பட்டதாகவும் ரஷ்ய அதிகாரிகள் கூறினர்.
எனினும் இந்த ட்ரோன் தாக்குதலால் உயிரிழப்புகள் எதுவும் இடம்பெற்றதா என்று கூறப்படவில்லை.
இந்நிலையில் ரஷ்யாவிற்குள் உள்ள இலக்குகளுக்கு எதிராகத் தாக்குதல்களை நடத்துவதை உக்ரேன் பகிரங்கமாக ஒப்புக் கொள்ளவில்லை.
அதே நேரத்தில் ரஷ்யா உக்ரேனிய தலைநகர் கீவ் மீது நடத்திய வான் வழித் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்ததாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.