நாட்டில் தற்போது முட்டைகளின் விலை கட்டுக்கடங்காமல் அதிகரித்துச் செல்கிறது.
முட்டை வியாபாரிகள் சங்கத்தினால் 55 ரூபாவுக்கு முட்டைகளை விநியோகிக்க உத்தரவாதம் வழங்கப்பட்ட போதும், சந்தையில் 75 ரூபாய் வரையில் முட்டை விற்பனையாகிறது.
இந்தநிலையில் வெளிநாட்டிலிருந்து முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை தீர்மானம் எடுத்துள்ளது.
வர்த்தக அமைச்சர் நலின் பண்டார முன்வைத்த யோசனைக்கு, ஜனாதிபதி ரணில் தலைமையில் இன்று கூடிய அமைச்சரவை அனுமதி வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.