மின்வெட்டு இனி இல்லை | பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிப்பு

1 year ago
Sri Lanka
aivarree.com

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் நிறைவடையும் வரையில் மின்வெட்டினை அமுலாக்காமல் இருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மின்சாரசபை, பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு உள்ளிட்ட தரப்பினர் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுடன் இன்று இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடத்;தினர்.

இதன்போது இதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக, பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இதன்படி எதிர்வரும் ஃபெப்ரவரி மாதம் 17ம் திகதி வரையில் நாட்டில் எங்கும் மின்வெட்டு அமுலாக்கப்பட மாட்டாது என்று அவர் அறிவித்துள்ளார்.