மின்தடை ஏற்படுத்தப்படாது என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நுரைச்சோலையின் மின்பிறப்பாக்கி ஒன்று பழுதடைந்துள்ளது.
இதனால் 220 மெகாவோட் மின்சாரம் தேசிய மின் கட்டமைப்புக்கு அற்றுப் போயுள்ளது.
எனவே மின்சாரத் துண்டிப்பை மேற்கொள்ள நேரும் என்று மின்சாரசபைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும் எக்காரணத்தைக் கொண்டும் மின்சார விநியோகத் தடையை ஏற்படுத்த அனுமதி இல்லை என பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அறிவித்துள்ளது.