எரிபொருள் நிரப்பும் நிலையமொன்றில் பொது மகன் ஒருவரை இராணுவ அதிகாரியொருவர் சப்பாத்துக் காலால் உதைத்த சம்பவம் குறித்து உள்ளக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இராணுவ பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் இரு பொது மக்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இராணுவத்தை தகாத வார்த்தைகளால் ஏசிய சிலரை பொலிஸார் இராணுவத்தினர் முன்னால் கொண்டு சென்றவேளை இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக இராணுவத் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
எரிபொருள் நிரப்பும் நிலையமொன்றில் இராணுவ அதிகாரியொருவர் பொது மகனை சப்பாத்துக் காலால் உதைக்கும் காணொளி சமூக ஊடகங்களில் பலராலும் பகிரப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.