வடக்கு – கிழக்கில் இடம்பெறும் சட்டவிரோத பெளத்த மயமாக்கலை முடிவுக்கு கொண்டு வருவதற்காக இந்தியாவில் உள்ள இந்து மத அமைப்புக்களின் உதவியை நாடவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அய்வரி செய்திச் சேவைக்கு அவர் வழங்கிய உரையொன்றில்,
இந்தியாவில் உள்ள இந்து அமைப்புக்களின் உதவியை நாடி, அவர்களுடன் கலந்தாலோசித்து வட-கிழக்கில் முன்னெடுக்கப்படும் அத்துமீறிய அல்லது சட்டவிரோத பெளத்த மயமாக்கலை எவ்வாறு தடுப்பது என்பது தொடர்பில் தீர்மானிக்கப்படும்.
இதற்கு இந்திய அரசாங்கத்தின் ஒத்துழைப்பையும், உதவியையும் நாடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
எனினும் இது தொடர்பான தீர்க்கமான தீர்மானம் இன்னும் எட்டப்படவில்லை என்றும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் சீ.வி. விக்னேஸ்வரன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.