பெண் அரச அதிகாரி படுகொலை

2 years ago
Sri Lanka
aivarree.com

பொலன்னறுவை – லங்காபுர பிரதேச சபையின் தலைமை நிர்வாக பெண் அதிகாரியொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

42 வயது இரண்டு பிள்ளைகளின் தாயே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

தாக்குதலில் தலையில் படுகாயமடைந்த அவர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

வீட்டின் அறையில் நபர் ஒருவர் இருப்பதைக் கண்டதாகவும் ஆனால் இருள் காரணமாக அவரை அடையாளம் காண முடியவில்லை எனவும், உயிரிழந்த பெண்ணின் கணவர் தெரிவித்துள்ளார்.