எரிபொருள் நெருக்கடி காரணமாக இன்று முதல் பேருந்து சேவை முற்றாக முடங்கலாம் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.
அனைத்து தனியார் பேருந்துகளும் எரிபொருள் வரிசையில் சிக்கியுள்ளதால், இரண்டாயிரம் பேருந்துகளை கூட சேவையில் ஈடுபடுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
பொது மக்களுக்கான பிரதான போக்குவரத்து மார்க்கமாக பேருந்தே காணப்படுகின்றது
வேறு எந்த வகையிலான போக்குவரத்து வசதிகளும் இன்றி இலட்சக் கணக்கான மக்கள் பாதிப்பினை எதிர்நோக்கியுள்ளனர்.
இலங்கையில் சுமார் 20 ஆயிரம் பேருந்துகள் போக்குவரத்து சேவையில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.