இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட இந்திக குணதிலக்க(40) என்பவர், அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் தமது இரண்டு பிள்ளைகளை (6 வயது மகன், 4 வயது மகள்) கொலை செய்து, தமது உயிரையும் மாய்த்துக் கொண்டார்.
தமது மனைவியைப் பிரிந்து வசிக்கும் அவர், நேற்றையதினம் தமது பிள்ளைகளை தம்மிடம் காண்பிக்க அழைத்து வராமையால், அதுகுறித்து அவரது முன்னாள் மனைவி காவல்துறையில் முறையிட்டுள்ளார்.
இதன்படி நடத்தப்பட்ட தேடுதலில், இரண்டு பிள்ளைகளும் அவர்களது இல்லத்தில் கொல்லப்பட்ட நிலையில் மீட்கப்பட்டதுடன், குணதிலக்கவும் வாகன தரிப்பிடத்துக்கு அருகில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பாடகரான அவர் நீண்டகாலமாக மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டிருந்தமையே உறுதிப்படுத்தும் வகையில் கிறிஸ்துமஸுக்கு முன்னர் பேஸ்புக்கில் காணொளி ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.
இந்த சம்பவத்துக்கான உண்மையான காரணம் என்னவென்று முழுமையான விசாரணைகளின் பின்னரே தெரிவிக்க முடியும் என்று, அவுஸ்திரேலிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.