பாடசாலைகளுக்கு விடுமுறை / கல்வி அமைச்சின் அறிவிப்பு

2 years ago
Sri Lanka
aivarree.com

பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவது தொடர்பான கல்வி அமைச்சின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதன்படி க.பொ.த உயர்தர பரீட்சை நடைபெறும் காலப் பகுதியில் ஆரம்ப வகுப்புக்களை தவிர, ஏனைய வகுப்புக்களுக்கு விடுமுறை வழங்கப்படவுள்ளது.

பெப்ரவரி மாதம் 04ம் திகதி முதல் மார்ச் மாதம் 06ம் திகதி வரை விடுமுறை அமுலாகும்.

உயர்தர பரீட்சைக்கு இடையூறாக அமையும் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கும் அதிகாரம் மாகாண கல்வி பணிப்பாளருக்கு வழங்கப்பட்டுள்ளது.